கெங்கவல்லியில் ரூ.1.30 லட்சம்  பறிமுதல்

கெங்கவல்லியில் செவ்வாய்க்கிழமை இரவு நடத்திய வாகனச் சோதனையில், ரூ.1.30 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
Updated on
1 min read

கெங்கவல்லியில் செவ்வாய்க்கிழமை இரவு நடத்திய வாகனச் சோதனையில், ரூ.1.30 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
கெங்கவல்லி அருகே மும்முடி சோதனைச் சாவடியில் சின்னசாமி தலைமையிலான பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியே காரில், சேலம் கிழக்கு மாவட்ட அமமுக கட்சியின் இணை செயலரும், கெங்கவல்லி அருகே நடுவலூரைச் சேர்ந்த கமலக்கண்ணனும் (39), இன்சூரன்ஸ் பணம் கட்டுவதற்காக ரூ.1.30 லட்சத்தை கொண்டு வந்தனராம். அவரை சோதனை செய்த பறக்கும் படையினரிடம், அவர் காட்டிய ஆவணம் போலியானது எனக் கூறி, பணத்தை பறிமுதல் செய்து கெங்கவல்லி வட்டாட்சியர் சுந்தரராஜனிடம் ஒப்படைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com