வங்கியில் திருட முயற்சி

வங்கியில் திருட முயன்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
Updated on
1 min read

வங்கியில் திருட முயன்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
தலைவாசல் அருகேயுள்ள ஊனத்தூரில் பல்லவன் கிராம வங்கிக் கிளையில் அலுவலர்கள் வியாழக்கிழமை மாலை  முடிந்து, இரவு  7 மணிக்கு பூட்டி விட்டுசென்றுள்ளனர். அன்று இரவு 11 மணிக்கு வங்கியில் இருந்து சத்தம் வரவே,  அருகில் வசிப்பவர்கள் திரண்டனர். அப்போது,  வங்கியின் கதவில் இருக்கும் பூட்டை உடைத்துகொண்டிருந்த மர்ம நபர்கள் கிராம மக்களைப் பார்த்தவுடன் தப்பிச் சென்றனர். தகவலின்பேரில் தலைவாசல் காவல் ஆய்வாளர் குமாரவேல் பாண்டியன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com