வைகுந்தம் சுங்கச் சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், ரூ. 1.10 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேட்டூர் வேளாண் பொறியியல் துறையைச் சேர்ந்த இளநிலைப் பொறியாளர் பி.எஸ்.நாகராஜன் தலைமையிலான தேர்தல் கூடுதல் பறக்கும்படையினர் குழுவினர் சங்ககிரியை அடுத்த வைகுந்தம் சுங்கச்சாவடியில் வாகனச் சோதனையில்
ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பெங்களூரில் இருந்து கோவையை நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனை செய்ததில், ரூ.1.10 லட்சம் ரொக்கம் உரிய ஆவணம் இல்லாமல் திருச்சி நாச்சியார் கோயில் தெருவைச் சேர்ந்த லோகபதி பீட்டர் (56) என்பவர் எடுத்துச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, பணத்தைப் பறிமுதல் செய்து நாமக்கல் மக்களவைத் தொகுதி உதவி தேர்தல் அலுவலரும், சங்ககிரி வருவாய்க் கோட்டாட்சியருமான மு.அமிர்தலிங்கத்திடம் தேர்தல் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.