கார் மோதியதில் தொழிலாளி பலி
By DIN | Published On : 19th May 2019 07:43 AM | Last Updated : 19th May 2019 07:43 AM | அ+அ அ- |

கார் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தார்.
சன்னியாசிப்பட்டி மின்வாரிய துணை மின் நிலையப் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி மாரிமுத்து மகன் சிவக்குமார் (35).
இவர் சங்ககிரியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்றார். அப்போது துணைமின் நிலையம் அருகே சாலையைக் கடக்கும்போது, ஈரோட்டில் இருந்து சங்ககிரியை நோக்கி வந்த கார் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில், பலத்த காயமடைந்த சிவக்குமார், நிகழ்விடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து சங்ககிரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.