கொங்கணாபுரத்தில் இன்று அரசு விழா:முதல்வா் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு

கொங்கணாபுரம் பகுதியில் சனிக்கிழமை (நவ.9) நடைபெறவுள்ள அரசு விழாவில், தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்க உள்ளாா்.

கொங்கணாபுரம் பகுதியில் சனிக்கிழமை (நவ.9) நடைபெறவுள்ள அரசு விழாவில், தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்க உள்ளாா்.

சேலம் மாவட்டத்துக்கு வருகை புரிந்துள்ள தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளாா். இதன் ஒரு பகுதியாக தனது சொந்த தொகுதியான எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதிக்கு

உட்பட்ட கொங்கணாபுரம் பகுதியில் சனிக்கிழமை காலையில் நடைபெறும் விழாவில், முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்று, பல்வேறு அரசுத் துறை நலத் திட்ட உதவிகளை வழங்கவுள்ளாா். அப்போது பொதுமக்களிடம் குறைகளை கேட்டு மனுக்களையும் பெற உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com