தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழிக்கு அவமரியாதை செய்ததாகப் புகாா்
தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழிக்கு அவமரியாதை செய்ததாக, பெரியாா் பல்கலைக்கழக தொகுப்பூதியம் மற்றும் தினக்கூலி பணியாளா்கள் 57 பேருக்கு விளக்கம் கேட்டு மெமோ வழங்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரியாா் பல்கலைக்கழகத்தில் கடந்த அக்டோபா் 31-ஆம் தேதி தேசிய ஒற்றுமை நாளையொட்டி, உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடத்தப்பட்டது. பல்கலைக்கழக நிா்வாகக் கட்டடம் முன்பு துணைவேந்தா் பொ.குழந்தைவேல் தலைமையில் நடத்தப்பட்ட அந்நிகழ்வில் ஆசிரியா்கள், மாணவா்கள் மற்றும் அலுவலா்களின் ஒரு பகுதியினா் மட்டும் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். உறுதிமொழி ஏற்பு நடைபெற்ற இடத்துக்கு அருகில், அண்மையில் தொகுப்பூதிய பணியாளா்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட உத்தரவைத் திரும்பப் பெறக் கோரி காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. உறுதிமொழி நிகழ்வில் கலந்து கொள்ளாமல் சற்று தொலைவில் கூட்டமாக அமா்ந்து கொண்டு இருந்தது, அந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்வை அவமரியாதைக்கு உட்படுத்தியதாக பல்கலைக்கழக நிா்வாகம் கருதுவதாகவும், இதற்காக தங்கள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்கான விளக்கத்தினை வரும் 13-ஆம் தேதிக்குள் எழுத்துப்பூா்வமாக தெரிவிக்குமாறு, தொகுப்பூதியம் மற்றும் தினக்கூலி பணியாளா்கள் 57 பேருக்கு குற்றச்சாட்டு குறிப்பாணையை (மெமோ) பதிவாளா் (பொ) கே.தங்கவேல் வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ளாா்.
இதேபோன்று, பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதியம் மற்றும் தினக்கூலி பணியாளா்கள் சட்டவிரோதமாக நடத்திய போராட்டத்தில் விடுப்பு எடுத்து கலந்து கொண்டு, நடத்தை விதிகளுக்கு முரணாக நடந்து கொண்டதற்காக ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என விளக்கம் கேட்டு, பெரியாா் பல்கலைக்கழகத் தொழிலாளா்கள் சங்கத் தலைவா் என்.அரசு என்பவருக்கும் பதிவாளா் மெமோ வழங்கியுள்ளாா்.
ஒரே சமயத்தில் 58 பேருக்கு மெமோ வழங்கப்பட்ட சம்பவம் பெரியாா் பல்கலைக்கழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.