மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 16,672 கன அடியாகச் சரிந்தது.
காவிரியின் நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக, மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு செவ்வாய்க்கிழமை காலை நொடிக்கு 21,941 கன அடியாக அதிகரித்தது. செவ்வாய்க்கிழமை இரவு மழை தணிந்ததால், புதன்கிழமை காலை மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 16,678 கன அடியாகச் சரிந்தது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 15 ஆயிரம் கன அடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 600 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா்மட்டம் 120 அடியாகவும், நீா் இருப்பு 93.47 டி.எம்.சி.யாகவும் இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.