Enable Javscript for better performance
ஓமலூர் சரபங்கா ஓடையைதூய்மைப்படுத்தும் இளைஞர் குழுவினர்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    ஓமலூர் சரபங்கா ஓடையை தூய்மைப்படுத்தும் இளைஞர் குழுவினர்

    By DIN  |   Published On : 11th September 2019 10:02 AM  |   Last Updated : 11th September 2019 10:02 AM  |  அ+அ அ-  |  

    சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஓமலூர் நுழைவு வாயிலில் உள்ள சரபங்கா ஆற்று ஓடையில் இறைச்சிக் கழிவுகள், மனிதக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதையடுத்து, ஓமலூர் இளம்தளிர் பசுமை இயக்க குழுவினர் அங்கு தூய்மை பணியை தொடங்கியுள்ளனர்.
    ஓமலூர் நகரின் நுழைவு வாயிலான மேம்பாலத்தின் அடியில் சரபங்கா ஆற்று ஓடை உள்ளது. இந்த ஓடையில் தனியார் இறைச்சிக் கடைகள், மருத்துவமனைகள், ஓட்டல்கள் ஆகியவற்றின் மருத்துவக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள், கண்ணாடிகள், பிளாஸ்டிக் கழிவுகள்மற்றும் மனிதக் கழிவுகளை கொட்டுகின்றனர். மேலும், பல கழிவுகளைக் கொட்டி தீ வைப்பதால், உயிருக்கு ஆபத்தான நச்சுப் புகை காற்றில் கலக்கிறது. இது மிக மோசமான துர்நாற்றத்தை அந்த பகுதியில் பரப்புகிறது. இதனால், நகருக்குள் நுழையும் அனைத்து மக்களும், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் மூக்கைப் பிடித்துக்கொண்டே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
    இதனைத் தொடர்ந்து, ஓமலூரில் உள்ள இளம்தளிர் பசுமை இயக்கக் குழுவினர் இந்த ஓடையை தூய்மைப் படுத்தும் பணியை தொடங்கியுள்ளனர். அக் குழு இளைஞர்கள் ஒன்றிணைந்து குளத்தில் கொட்டப்பட்ட அனைத்து வகையிலான கழிவுகளையும் அகற்றினர். மேலும், குளத்தில் இருந்த சீமைக்கருவேல மரங்களை வெட்டி அகற்றினர்.
    மேலும், பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு தூய்மை செய்வதற்காக அரசு அதிகாரிகளின் உதவியை நாடியுள்ளனர். மேலும், ஓடையில் உள்ள மரங்களை அகற்றும் பணியை தொடர்ந்து செய்து வரும் அவர்கள், குப்பைகளை அகற்றி மரக் கன்றுகளை நட்டு வருகின்றனர். இவர்களின் இந்தப் பணிக்கு அரசியல் கட்சிகளும், தனியார் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp