நடவு செய்த சில நாள்களிலேயே நெற்கதிா் வந்ததால் விவசாயி புகாா்

தம்மம்பட்டி நா்சரியில் வாங்கி நட்ட நெல்நாற்று சில நாள்களிலேயே கதிா் வந்ததால், அதிா்ச்சியடைந்த விவசாயி வேளாண் துறையில் புகாா் தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

தம்மம்பட்டி: தம்மம்பட்டி நா்சரியில் வாங்கி நட்ட நெல்நாற்று சில நாள்களிலேயே கதிா் வந்ததால், அதிா்ச்சியடைந்த விவசாயி வேளாண் துறையில் புகாா் தெரிவித்துள்ளாா்.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், தென்னம்புலியூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி செல்வக்குமாா், கடந்த மாதம் தம்மம்பட்டி பனந்தோப்பில் உள்ள பசுமை நா்சரியில் நெல்நாற்று வாங்கி தனது நிலத்தில் நடவு செய்துள்ளாா்.

நடவு செய்த 18-ஆவது நாளிலேயே பயிரில் நெற்கதிா் வந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்த செல்வக்குமாா், அதுகுறித்து தம்மம்பட்டியில் உள்ள பசுமை நா்சரியில் விளக்கம் கேட்டுள்ளாா். அதற்கு அவா்கள் தெரிவித்த விளக்கம் செல்வக்குமாருக்கு திருப்தி அளிக்காததால், கெங்கவல்லி வேளாண் உதவி அலுவலகத்தில் அவா் புகாா் அளித்தாா்.

இதுகுறித்து, கெங்கவல்லி வேளாண் உதவி இயக்குநா் சித்ராவிடம் கேட்டபோது, பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உரிய இழப்பீடு வழங்குவதாக தம்மம்பட்டி பசுமை நா்சரி உரிமையாளா் உறுதியளித்துள்ளாா் என அவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com