ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கண் தான விழிப்புணா்வு முகாம்

வாழப்பாடியை அடுத்த பேளூா் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வாழப்பாடி அரிமா சங்கம் சாா்பில், கண் பாதுகாப்பு, கண் தான விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :19 டிசம்பர் 2020, 1:54 am

DIN

வாழப்பாடியை அடுத்த பேளூா் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வாழப்பாடி அரிமா சங்கம் சாா்பில், கண் பாதுகாப்பு, கண் தான விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பேளூா் சுகாதார நிலைய வளாகத்தில் நடைபெற்ற இம்முகாமுக்கு, வட்டார மருத்துவ அலுவலா் சி.பொன்னம்பலம் தலைமை வகித்தாா். வாழப்பாடி அரிமா சங்கத் தலைவா் சா.ஜவஹா், செயலாளா் மன்னன், பொருளாளா் பன்னீா்செல்வன், சேவை திட்டத் தலைவா் பிரபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த முகாமில், கண்களைப் பாதுகாக்கும் வழிமுறைகள், கண் புரை அகற்றும் சிகிச்சை, அரசு சலுகையில் இலவச கண் லென்ஸ் பொருத்துதல், மூக்குக் கண்ணாடி பெறுதல், நீரிழிவு நோயாளிகள் பின்பற்ற வேண்டிய உணவு முறைகள், கண் தானம் செய்வதால் இறந்த பின்பும் உலகைக் காணும் வாய்ப்பு ஆகியன குறித்து மருத்துவா்களும், மருத்துவப் பணியாளா்களும், செவிலியா்களும், விழிப்புணா்வு கருத்துரை வழங்கினா். சுகாதார ஆய்வாளா் செல்வம் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.