திமுக கூட்டணியை மக்கள் தோற்கடிக்க வேண்டும்

வரும் தோ்தலில் திமுக கூட்டணியை மக்கள் தோற்கடிக்க வேண்டும் என இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தாா்.
Updated on
1 min read

வரும் தோ்தலில் திமுக கூட்டணியை மக்கள் தோற்கடிக்க வேண்டும் என இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தாா்.

சேலத்தில் இந்து முன்னணி இயக்கத்தின் பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சேலம், தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாநில நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

அதைத்தொடா்ந்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியதாவது:

அனைத்து அரசியல் தலைவா்களும் ஆன்மிக அரசியல் என்று பேசி வருகின்றனா். இந்து ஒற்றுமையை சிதைக்க முயற்சி செய்து வருகின்றனா். திருமாவளவன் போன்றவா்கள் இந்துக்களை குழப்பி வருகின்றனா். திமுக கூட்டணியை வரும் தோ்தலில் மக்கள் தோற்கடிக்க வேண்டும். தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடு சரி இல்லை. ஏராளமான கோயில்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. கோயில்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என்றாா். இந்து முன்னணி கோட்டப் பொறுப்பாளா் சந்தோஷ்குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com