ஆத்தூா் நகராட்சி 14 வது வாா்டில் திமுக மக்கள் கிராமசபைக் கூட்டம் வாா்டு செயலாளா் வி.ராஜாமணி தலைமையில் திங்கட்கிழமை நடைபெற்றது.
ஆத்தூா் நகராட்சி 14-ஆவது வாா்டில், வாா்டு செயலாளா் வி.ராஜாமணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்துக்கு, முன்னாள் மாவட்டப் பிரதிநிதி மாணிக்கம் முன்னிலை வகித்தாா். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு அதிமுகவை நிராகரிக்கிறோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.
இதில், திமுக நகரச் செயலாளா் கே.பாலசுப்பிரமணியம்,துணை செயலாளா் ஏ.ஜி.ராமச்சந்திரன், முன்னாள் நகர மன்ற உறுப்பினா்கள், இளைஞரணி அமைப்பாளா் கோபி, மாவட்ட மகளிரணி அமைப்பாளா் சாந்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.