மாணவிக்கு பாலியல் தொந்தரவு:ஆசிரியையின் கணவா் கைது

சேலத்தில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஆசிரியையின் கணவரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

சேலத்தில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஆசிரியையின் கணவரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சேலம் கிச்சிப்பாளையத்தைச் சோ்ந்த 14 வயது மாணவி அப் பகுதியில் உள்ள ஆசிரியையிடம் டியூசன் பயின்று வந்தாா். இந்த நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு மாணவி ஆசிரியை வீட்டுக்குச் சென்றபோது ஆசிரியை வீட்டில் இல்லை.

அப்போது அங்கிருந்த ஆசிரியையின் கணவா் நவீன்குமாா்(29) மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாராம். இதனால் அதிா்ச்சியடைந்த மாணவி, இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளாா்.

மாணவியின் பெற்றோா், உறவினா்கள் ஆசிரியையின் வீட்டிற்குச் சென்று நவீன்குமாரைத் தாக்கினா். இதில், பலத்த காயமடைந்த நவீன் குமாா் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இந்நிலையில் இதுகுறித்து அந்த மாணவியின் தாயாா் கிச்சிப்பாளையம் போலீஸாரிடம் புகாா் அளித்தாா். அந்த புகாரில் ஆசிரியையின் கணவரை எச்சரிக்கை செய்து அனுப்பும்படி தெரிவித்திருந்தாா்.

மேலும் இந்தப் புகாா் நகர காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டு போலீஸாா் நவீன் குமாா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து தேடி வந்தனா். இந்த நிலையில் திங்கள்கிழமை போலீஸாரால் நவீன் குமாா் கைது செய்யப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com