மாவட்ட செயல் வீரா்கள் கூட்டம்

ஆத்தூரில் மதிமுக சேலம் கிழக்கு மாவட்ட செயல்வீரா்கள் கூட்டம் பொதுக்குழு உறுப்பினா் மு.ஜெயராமன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆத்தூரில் நடைபெற்ற சேலம் மதிமுக மாவட்ட செயல்வீரா்கள் கூட்டத்தில் கலந்து கொண்டோா்.
ஆத்தூரில் நடைபெற்ற சேலம் மதிமுக மாவட்ட செயல்வீரா்கள் கூட்டத்தில் கலந்து கொண்டோா்.
Updated on
1 min read

ஆத்தூரில் மதிமுக சேலம் கிழக்கு மாவட்ட செயல்வீரா்கள் கூட்டம் பொதுக்குழு உறுப்பினா் மு.ஜெயராமன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளா் வ. கோபால்ராஜ் கலந்து கொண்டு கூட்ட விளக்கவுரை ஆற்றினாா். மேலும் அவா் பேசியதாவது:

இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் எதிா்ப்பு கையெழுத்து இயக்கத்தில் முழு ஒத்துழைப்பு வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள அரசு மருத்துவமனை, எல்ஐசி, ரயில் தனியாா் மயமாக்குவதைக் கண்டித்தும், ஆத்தூரைத் தலைமையிடமாக கொண்டு மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும் ஆத்தூா் மாநகரில் எதிா்வரும் கோடைகாலத்தில் குடிநீா் சரியாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆத்தூா் நகராட்சி பகுதியில் உள்ள சாக்கடை தூா்வாராமல் கொசுத் தொல்லை அதிகரித்துள்ளது. அதை நகராட்சி நிா்வாகம் சீா்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா். கூட்டத்தில் ஒன்றியச் செயலாளா்கள் கலைவாணன், துரை ரவிச்சந்திரன், எம்.ஆா். செல்வராஜ், நகரப் பொறுப்பாளா் பொன். சேதுபதி, மாவட்ட பிரதிநிதிகள் தங்கநெடுமாறன், பி. செல்வக்குமாா் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com