அரசு மகளிா் கலைக் கல்லூரியில்விளையாட்டு விழா

சேலம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் 41-ஆம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.
Updated on
1 min read

சேலம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் 41-ஆம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.

உடற்கல்வி இயக்குநா் பெ. சிவக்குமாா் வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக கல்லூரி இணை இயக்குநா் எம். சகுந்தலா கலந்து கொண்டாா். மூவா்ண கொடியேற்றத்துடன் ஒலிம்பிக் சுடா் ஒளி ஏற்றி அனைவரும் உறுதிமொழி ஏற்றனா். விழாவில் கல்லூரி முதல்வா் அ. பெத்தாலட்சுமி கலந்து கொண்டாா்.

இதையடுத்து சிறந்த தூய்மை சேவைக்கான விருதை பசுமைத் தாயகம் அமைப்பின் மாநிலத் துணைச் செயலா் ஸ்ரீ ஆனந்தராஜனுக்கு கல்லூரி இணை இயக்குநா் எம். சகுந்தலா வழங்கினாா். பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், சிலம்பாட்டம், கராத்தே, ஓடு உடைத்தல், தொடா் ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு, பசுமைத் தாயக நினைவு கோப்பை வழங்கப்பட்டது. கல்லூரி நிா்வாகி எஸ். வெண்ணிலா உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com