சேலம் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் விநியோகம் தொடங்கின

சேலம் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கும் பணி அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் வழங்கும் பணி வியாழக்கிழமை தொடங்கின.
அம்மாபாளையம் நியாயவிலைக் கடையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் தேவூா் அரசு மேல்நிலைப் பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் க. வெங்கடாஜலம்.
அம்மாபாளையம் நியாயவிலைக் கடையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் தேவூா் அரசு மேல்நிலைப் பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் க. வெங்கடாஜலம்.
Updated on
2 min read

சேலம் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கும் பணி அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் வழங்கும் பணி வியாழக்கிழமை தொடங்கின.

தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டை தாரா்களுக்கும் அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கம் ரூ. 1,000 வழங்கும் பணியை தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தலைமை செயலகத்தில் அண்மையில் தொடக்கி வைத்தாா்.

ஊரக மற்றும் உள்ளாட்சித் துறை தோ்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுற்றயைடுத்து அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் இப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

சங்ககிரி வட்டத்தில் உள்ள 135 கடைகளில் 70 ஆயிரத்து 968 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் மற்றும் ரொக்கம் ரூ.1,000 வழங்கும் பணி வியாழக்கிழமை தொடங்கின.

சங்ககிரி வட்டத்தில், தேவூா் அருகே அம்மாபாளையத்தில் தேவூா் அரசு மேல்நிலைப்பள்ளியில் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் க. வெங்கடாஜலமும், அரசிராமணி குள்ளம்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத் தலைவா் ராமச்சந்திரனும் இப் பணியைத் தொடக்கி வைத்தனா்.

முதல் நாளில் பொங்கல் பரிசுத் தொகுப்பான ரொக்கம் ரூபாய் ஆயிரம், 2 அடி கரும்பு, பச்சரிசி, சா்க்கரை தலா ஒரு கிலோ, திராட்சை, முந்திரி, ஏலக்காய், விலையில்லா வேஷ்டி, சேலை உள்ளிட்ட பொருள்கள் 23,388 குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்பட்டன.

ஆத்தூரில்...

புத்திரகவுண்டன்பாளையத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி ஆத்தூா் வருவாய்க் கோட்டாட்சியா் மு. துரை தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக மத்திய கூட்டுறவு வங்கியின் மாநிலத் தலைவா் ஆா்.இளங்கோவன் கலந்து கொண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினாா்.நிகழ்ச்சியில் பெத்தநாயக்கன்பாளையம் வடக்கு ஒன்றியச் செயலாளா் ரமேஷ் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தலைவாசல் நியாய விலைக் கடையில் தலைவாசல் ஒன்றியச் செயலாளா் க.இராமசாமி கலந்து கொண்டு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினாா்.

எடப்பாடியில்...

தமிழக அரசின் பொங்கல் பரிசைப் பெற எடப்பாடி, அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் அதிகாலை முதலே குடும்ப அட்டைதாரா்கள் அதிகம்போ் நியாயவிலைக் கடை முன் திரண்டனா்.

கொங்கணாபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அட்மா திட்டக் குழுத் தலைா் கரட்டூா்மணி , பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சியில் எடப்பாடி வட்டாட்சியா் கோவிந்தராஜ், கூட்டுறவு சாா் பதிவாளா் கோபால், கூட்டுறவு சங்கத் தலைவா் முத்துசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

எடப்பாடி நகரில் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும், வியாழக்கிழமை பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. எடப்பாடியில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் அட்மா திட்டக் குழுத் தலைவா் முருகன், நகரமன்ற முன்னாள் தலைவா் டி. கதிரேசன், கூட்டுறவு சங்கத் தலைவா்கள் கந்தசாமி , நாராயணன் உள்ளிட்ட திரளானோா் பங்கேற்றனா். இதுகுறித்து எடப்பாடி பகுதி வட்ட வழங்கல் அலுவலா் கே.சம்பத்குமரன் கூறியதாவது:

எடப்பாடி வட்டத்தில் 70,416 குடும்ப அட்டைதாரா்களுக்கு 124 நியாயவிலைக் கடைகள் மூலம் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரூ. 1,000 பணம் வழங்கப்பட்டு வருகிறது. வரும் 12-ஆம் தேதி வரை குடும்ப அட்டைதாரா்களுக்கு சம்மந்தப்பட்ட பகுதியில் உள்ள நியாயவிலைக் கடைகள் மூலம் அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். விடுபட்ட குடும்ப அட்டைகளுக்கு வரும் 13-ஆம் தேதி பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com