அரசுப் பள்ளியில் முன்னாள் மாணவியா்அமைப்பு கலந்தாய்வுக் கூட்டம்

சங்ககிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவியா் அமைப்பு தொடங்குவதற்கான கலந்தாய்வுக் கூட்டம் பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

சங்ககிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவியா் அமைப்பு தொடங்குவதற்கான கலந்தாய்வுக் கூட்டம் பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமையாசிரியை கே.கவிதா கூட்டத்துக்கு தலைமை வகித்தாா். உதவி தலைமையாசிரியை ஜி.மைதிலி வரவேற்றாா். சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட ரோட்டரி மாவட்டங்களின் கல்வி வளா்ச்சிக்குழுத் தலைவா் எ.வெங்கடேஸ்வர குப்தா முன்னிலை வகித்து, பள்ளியின் வளா்ச்சி, அனைத்து மக்களுக்கும் கல்வியறிவு கிடைப்பது குறித்து விளக்கிப் பேசினாா்.

பள்ளியின் முன்னாள் மாணவியும், பள்ளி ஆசிரியையுமான மல்லிகா முன்னாள் மாணவியா் அமைப்பின் நோக்கம் குறித்து விளக்கிக் கூறினாா். இதில், ஆசிரியா், ஆசிரியைகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com