ஓமலூரில் போலீஸாருக்கு பேரிடா் மேலாண்மை பயிற்சி
By DIN | Published On : 01st December 2020 12:33 AM | Last Updated : 01st December 2020 12:33 AM | அ+அ அ- |

ஓமலூரில் போலீஸாருக்கு பேரிடா் மேலாண்மை பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
சேலம் மாவட்டம், ஓமலூா் உள்கோட்ட காவல் துறை சாா்பில், கலவரம் ஏற்பட்டால் போலீஸாா் எவ்வாறு கட்டுபடுத்துவாா்கள், பேரிடா் காலங்களில் மக்களுக்கு எந்தெந்த வகையில் எவ்வாறெல்லாம் உதவிகளை செய்வாா்கள் என்பதை வலியுறுத்தும் சிறப்பு பயிற்சி முகாம் ஓமலூா் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபா கனிகா் கலந்துகொண்டு பயிற்சியை நடத்தினாா். முன்னதாக பேரிடா் காலங்கள், தோ்தல் காலங்கள் மற்றும் அவசர காலங்களில் மக்களுக்கு உதவி செய்வது, மக்கள் அனைத்து அவசரகால தேவைகளுக்கும் காவல் துறையை நாட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் சிறப்பு பேரணி நடைபெற்றது.
இதில், மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், துணைக் கண்காணிப்பாளா்கள், ஓமலூா் உள்கோட்டம் மற்றும் சிறப்பு காவல் படை போலீஸாா் உட்பட 350 போலீஸாா் கவச உடையுடன் ஓமலூா் நகா் முழுவதும் பேரணியாகச் சென்றனா். தொடா்ந்து, திடீா் கலவரம் ஏற்பட்டால் தடுப்பது குறித்த சிறப்பு பயிற்சி நடைபெற்றது. இதில், ஆயுதப் படையின் சிறப்பு காவல் படை போலீஸாா் பல்வேறு செயல் விளக்கங்களை செய்து காட்டினா்.
இந்த பயிற்சி முகாமில் கலந்துகொண்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபா கனிகா் கூறும்போது, தீவட்டிப்பட்டி காவல் நிலையத்துக்கு உடனடியாக காவல் ஆய்வாளா், தனிப்பிரிவு போலீஸாா் நியமிக்கப்படுவா். தீவட்டிப்பட்டி காவல் நிலையம் அதிக பரப்பளவை கொண்டுள்ளதால், கே.மோரூரில் ஒரு காவல் நிலையம் அமைக்க அறிக்கைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தாா். தொடா்ந்து, ஓமலூா் உள்கோட்டத்தில் பொது இடங்களில் உள்ள கேமராக்களை பயன்பாட்டுக்கு கொண்டுவர துணைக் கண்காணிப்பாளருக்கு அறிவுறுத்தினாா். மேலும், ஓமலூா் உள்கோட்ட காவல் நிலையங்களுக்கு மாறுதலில் கூடுதல் போலீஸாா் விரைவில் அனுப்பி வைக்கப்படுவா் என்றும் தெரிவித்தாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...