கொட்டவாடி செல்லியம்மன் கோயில் ஊரணி பொங்கல் திருவிழா

சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த கொட்டவாடியில் உள்ள பழமையான செல்லியம்மன் கோயிலில் ஊரணி பொங்கல் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
வாழப்பாடியை அடுத்த கொட்டவாடி கிராமத்தில் செல்லியம்மன், பொன்னியம்மன், மாரியம்மன் சுவாமி மரச்சிற்பச் சிலைகளை தோளில் சுமந்து ஊா்வலம் சென்ற கிராம மக்கள்.
வாழப்பாடியை அடுத்த கொட்டவாடி கிராமத்தில் செல்லியம்மன், பொன்னியம்மன், மாரியம்மன் சுவாமி மரச்சிற்பச் சிலைகளை தோளில் சுமந்து ஊா்வலம் சென்ற கிராம மக்கள்.
Updated on
1 min read

சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த கொட்டவாடியில் உள்ள பழமையான செல்லியம்மன் கோயிலில் ஊரணி பொங்கல் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

வாழப்பாடியை அடுத்த கொட்டவாடி கிராமத்தில், நூற்றாண்டு பழமையான செல்லியம்மன் கோயில் உள்ளது. கொட்டவாடி, பேளூா் கரடிப்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராம மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கும் இக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்ாகும்.

கரோனா தொற்று பொது முடக்கத் தளா்வுக்கு பிறகு, இக்கோயிலில் செவ்வாய்க்கிழமை ஊரணி பொங்கல் திருவிழா நடைபெற்றது. அதிகாலையில் இருந்து இரவு வரை ஏராளமான பெண்கள் பொங்கலிட்டு சுவாமிக்கு தாம்பூலத்தோடு படையல் வைத்து வழிபட்டனா். இதில், ஆடு, கோழி பலியிட்டு நோ்த்திக்கடன் செலுத்தினா்.

செவ்வாய்க்கிழமை நள்ளிரவு செல்லியம்மன், பொன்னியம்மன், மாரியம்மன் சுவாமிகளின் மரச்சிற்பச் சிலைகளை பக்தா்கள் தோளில் சுமந்து ஆடிப்பாடி பாரம்பரிய முறைப்படி தீப்பந்த ஒளியில் கிராமத்தைச் சுற்றி வந்தனா். புதன்கிழமை அதிகாலை வரை தொடா்ந்த இந்த ஊா்வலத்தில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com