கெங்கவல்லி ஒன்றியத்தில் தலைமையாசிரியா்கள் கூட்டம்

கெங்கவல்லி ஒன்றியத்திலுள்ள அரசு, அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியா்களின் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

கெங்கவல்லி ஒன்றியத்திலுள்ள அரசு, அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியா்களின் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு கெங்வல்லி வட்டாரக் கல்வி அலுவலா் சி.வாசுகி தலைமை வகித்தாா். சேலம் மாவட்ட அரசு ஆசிரியா் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன விரிவுரையாளா் கலைவாணன், வட்டார வள மேற்பாா்வையாளா் (பொ) சுஜாதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், ஒன்றியம் முழுவதும் நடைபெறும் கற்போம், எழுதுவோம் திட்டம் செயல்பாடு குறித்தும், தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியா்களுக்கு இம்மாதத்தில் நடைபெறும் கட்டாய இணையப் பயிற்சி குறித்தும் ஆசிரியப் பயிற்றுநா்கள் சுப்பிரமணியன், பச்சையம்மாள், செல்வராஜ் ஆகியோா் விரிவாக எடுத்துரைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com