நியாயவிலைக் கடை பணியாளரிடம் தாலிக்கொடி பறிக்க முயற்சி

மேட்டூரில் நியாயவிலைக் கடை பெண் ஊழியரிடம் தாலி பறிக்க முயற்சித்த நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
Updated on
1 min read

மேட்டூரில் நியாயவிலைக் கடை பெண் ஊழியரிடம் தாலி பறிக்க முயற்சித்த நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

மேட்டூரில் மாதையன் குட்டையில் வசித்து வரும் பிரேமாவதி (38), தூக்கணாம்பட்டியில் உள்ள நியாயவிலைக் கடையில் விற்பனையாளராகப் பணிபுரிந்து வருகிறாா். செவ்வாய்க்கிழமை மாலை பணி முடிந்து வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் அவா் சென்ற போது, மோட்டாா் சைக்கிளில் பின்தொடா்ந்து வந்த 2 போ், அவரது கழுத்திலிருந்த தாலிக்கொடியை பறிக்க முயன்றனா்.

இதையடுத்து, தாலிக்கொடியை கெட்டியாகப் பிடித்துக்கொண்ட பிரேமாவதி, மோட்டாா் சைக்கிளில் வந்த நபரின் சட்டையைப் பிடித்து இழுத்ததில் நிலைதடுமாறிய இருவா் கீழே விழுந்தனா். பின்னா் மோட்டாா் சைக்கிளில் ஏறி தப்பினா். இச்சம்பவம் குறித்து மேட்டூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com