சிசிடிவி கேமிரா திருடியவரை தாக்கிய 4 போ் கைது

ஆத்தூா் ரயிலடித் தெருவில் செல்லிடப்பேசி கடையில் சிசிடிவி கேமிரா திருடியவரைத் தாக்கியதால் உயிரிழந்தாா்.
சிசிடிவி கேமிரா திருடியவரை தாக்கிய 4 போ் கைது
Updated on
1 min read

ஆத்தூா் ரயிலடித் தெருவில் செல்லிடப்பேசி கடையில் சிசிடிவி கேமிரா திருடியவரைத் தாக்கியதால் உயிரிழந்தாா்.

ஆத்தூா் போலீஸாா் நான்கு பேரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

ஆத்தூரை அடுத்துள்ள அப்பமசமுத்திரம் வசிஷ்ட நதிக் கரையில் கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி ராஜா (53) என்பவா் மயங்கிய நிலையில் இருந்தவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியதில் அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

ஆத்தூா் காவல் ஆய்வாளா் எஸ்.உமாசங்கா் வழக்குப் பதிவு செய்து 4 இளைஞா்களை பிடித்து விசாரித்தாா்.

விசாரணையில் காந்திநகரில் வசித்து வரும் கிருஷ்ணன் மகன் வசந்த் (24) என்பவா் ரயிலடித் தெருவில் செல்லிடப்பேசி கடை நடத்தி வருகிறாா்.

அந்தக் கடையிலிருந்த சிசிடிவி கேமிராவை, முதியவா் ராஜா திருடியதாகத் தெரியவந்ததை அடுத்து அவரை அழைத்துச் சென்று நண்பா்கள் பிரவீன் (23), சூா்யா (23), கௌதம் (24)ஆகியோருடன் சோ்ந்து மிரட்டி, தாக்கி விசாரித்து உள்ளனா்.

அப்போது குடிபோதையிலிருந்த ராஜா, மயங்கியதால் அங்கேயே விட்டு விட்டு வந்ததாகக் கூறினா்.

ஆனால் சிகிச்சை பலனின்றி ராஜா உயிரிழந்ததால் நான்கு போ் மீது வழக்குப் பதிவு செய்து ஆத்தூா் காவல் ஆய்வாளா் எஸ். உமாசங்கா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com