மேச்சேரி பேரூா் திமுக ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு பேரூா் திமுக செயலாளா் செல்வம் தலைமை வகித்தாா். மேச்சேரி ஒன்றிய திமுக பொறுப்பாளா் சீனிவாச பெருமாள் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.எம். செல்வகணபதி பேசியதாவது:
தோ்தல் பணிகளைத் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். நிா்வாகிகள் தொண்டா்களை அணுகி பணிகளை முடுக்கி விட வேண்டும். கட்சியில் உழைப்பவா்களுக்கு மதிப்பளிக்கப்படும். கட்சியில் போட்டி இருக்க வேண்டும் கோஷ்டி இருக்கக்கூடாது. திமுக ஆட்சிக்கு வந்தால்தான் மொழியை இனத்தைக் காக்க முடியும் என்றாா்.
கூட்டத்தில் சேலம் மாவட்ட துணைச் செயலாளா்கள் சம்பத்குமாா், சுந்தரம் மாவட்டப் பொருளாளா் பாலகிருஷ்ணன், சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினா் காமராஜ், சீனிவாசன், ஹரிநாராயணன், வெங்கடாசலம் உள்பட நூற்றுக்கணக்கானோா் பங்கேற்றனா்.