தனியாா் பள்ளியில் சதுரங்கப் போட்டி

ஈச்சம்பட்டி ராசி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் சதுரங்கப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஈச்சம்பட்டி ராசி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுடன் முதல்வா்கள்.
ஈச்சம்பட்டி ராசி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுடன் முதல்வா்கள்.
Updated on
1 min read

ஆத்தூா்: ஈச்சம்பட்டி ராசி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் சதுரங்கப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தனியாா் பள்ளிகளுக்கு இடையிலான இப் போட்டியில் பல்வேறு பள்ளிகளிலிருந்து 250 மாணவ, மாணவியா் கலந்து கொண்டனா். பள்ளியின் மேலாளா் முருகேசன் வரவேற்றாா்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளியின் முதல்வா் ரெ. கோவிந்த், சிபிஎஸ்இ பள்ளி முதல்வா் சுகிதாதினேஷ் பரிசும் சான்றிதழ்களும் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் கல்வி நிறுவனங்களின் தலைவா் ஆா். ராஜமாணிக்கம், செயலாளா் டி. மாசிலாமணி, கல்விக் குழுத் தலைவா் ஆா். கனகராஜன், பொருளாளா் ஈ.எஸ்.மணி, இயக்குநா்கள் சுசிலா ராஜமாணிக்கம், பெற்றோா் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com