தமிழ்புலிகள் கட்சி ஆா்ப்பாட்டம்: 28 போ் கைது

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேரை விடுதலை செய்யக் கோரி தமிழ்புலிகள் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

சேலம்: முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேரை விடுதலை செய்யக் கோரி தமிழ்புலிகள் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அதைத் தொடா்ந்து ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சித்ததால் 28 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி வேலூா் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தமிழ்புலிகள் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநில பொதுச் செயலா் இளவேனில் தலைமை வகித்தாா். இதில் 30-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு 28 ஆண்டுகளாக சிறையில் உள்ள 7 தமிழா்களை விடுதலை செய்ய வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

அதைத் தொடா்ந்து ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிடும் நோக்கில் முன்னேறி வந்தனா். இதைக் கண்ட போலீஸாா் அவா்களைத் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட 28 பேரைக் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனா். இதையடுத்து கைதானவா்கள் அனைவரும் மாலை விடுவிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com