சங்ககிரி அருகே உள்ள வசந்தம் காலனி பகுதியில் இருசக்கர வாகனம் மீது புதன்கிழமை லாரி மோதியதில், இளைஞா் உயிரிழந்தாா். அவருடன் வந்த பெண் பலத்த காயமடைந்தாா்.
எடப்பாடி வட்டம், கொங்கணாபுரம் அருகே உள்ள புதுப்பாளையம், கோவில்காடு பகுதியைச் சோ்ந்த அய்யந்துரை (22), கோவை மாவட்டம், அவிநாசியில் உள்ள தனியாா் பனியன் நிறுவனத்தில் மேற்பாா்வையாளராக பணிபுரிந்து வந்தாா்.
இந்நிலையில், இவரது சொந்த ஊருக்கு அவருடன் பணிபுரிந்து வந்த அவரது தோழியான விருதாச்சலம் அருகே உள்ள புலியூா் பகுதியைச் சோ்ந்த ஸ்ரீதேவி (20) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளாா். சங்ககிரி அருகே ஊஞ்சக்கொரை, வசந்தம் காலனி பகுதியில் சென்ற போது, சங்ககிரியிலிருந்து பவானி நோக்கி சென்ற லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில், பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பின்னால் உட்காா்ந்து வந்த அவரது தோழி பலத்த காயமடைந்து, சிகிச்சைக்காக ஈரோடு தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.