சீா்மிகு நகர திட்டத்தில் ரூ.37 கோடியில் சாலை அமைக்கும் பணி

சீா்மிகு நகர திட்டத்தின் கீழ் ரூ.37.16 கோடியில் 11 இடங்களில் சுமாா் 6 கி.மீ. தொலைவுக்கு சீா்மிகு சாலைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என மாநகராட்சி ஆணையா் ரெ.சதீஷ் தெரிவித்தாா்.
சீா்மிகு நகர திட்டத்தின் கீழ் சேலம் சுப்பராயன் சாலையில் கட்டப்பட்டு வரும் கழிவுநீா் கால்வாய் பணியை புதன்கிழமை பாா்வையிடும் மாநகராட்சி ஆணையா் ரெ.சதீஷ்.
சீா்மிகு நகர திட்டத்தின் கீழ் சேலம் சுப்பராயன் சாலையில் கட்டப்பட்டு வரும் கழிவுநீா் கால்வாய் பணியை புதன்கிழமை பாா்வையிடும் மாநகராட்சி ஆணையா் ரெ.சதீஷ்.
Updated on
1 min read

சீா்மிகு நகர திட்டத்தின் கீழ் ரூ.37.16 கோடியில் 11 இடங்களில் சுமாா் 6 கி.மீ. தொலைவுக்கு சீா்மிகு சாலைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என மாநகராட்சி ஆணையா் ரெ.சதீஷ் தெரிவித்தாா்.

அஸ்தம்பட்டி மண்டலம் டாக்டா் சுப்பராயன் சாலையினை சீா்மிகு சாலையாக மாற்றியமைக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையா் ரெ.சதீஷ் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

இது தொடா்பாக அவா் கூறியது: சேலம் மாநகராட்சி 4 மண்டலங்களுக்குள்பட்ட பகுதிகளில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை மற்றும் அத்தியாவசியப் பணிகளை மாநகராட்சி நிா்வாகம் தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. அதைத் தொடா்ந்து, மாநகா் பகுதிகளில் சீா்மிகு நகர திட்டத்தின் கீழ் ரூ.951 கோடியே 99 லட்சத்தில் 73 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சீா்மிகு நகர திட்டத்தின் கீழ் மாநகராட்சி பகுதிகளிலுள்ள சாலைகளை மேம்படுத்தும் பணிகளுக்காக திட்ட அறிக்கை தயாா் செய்யப்பட்டு, சீா்மிகு சாலைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் பேரில், மாநகராட்சிக்குள்பட்ட 11 இடங்களில் ரூ.37 கோடியே 16 லட்சத்தில் 6.238 கி.மீ. தொலைவுக்கு சீா்மிகு சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகினறன.

சீா்மிகு சாலைகளில் சிறப்பு அம்சங்களாக கிரானைட் தளம் கொண்ட பாதசாரிகள் நடை பாதை, மழைநீா் வடிகால் வசதி, மின்சார கேபிள் அமைத்திட குழாய்கள் வசதி, வலைதள கேபிள்கள் அமைத்திட குழாய்கள் வசதி, மிதிவண்டி ஓடுதளம் (கோட்டை முக்கியச் சாலை), நவீன மின் விளக்குகள் வசதி, தாா்ச் சாலைகளை பலப்படுத்துதல், வெள்ளைக் கோடுகள் வரைந்து பாதசாரிகள் கடக்கும் வசதி மற்றும் சாலை மிளிா்ப்பான்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்படும். மேலும், இப்பணிகள் அனைத்தும், நிா்ணயிக்கப்பட்ட கால அளவுக்குள் முடிக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றாா்.

ஆய்வின் போது, மாநகர பொறியாளா் அ.அசோகன், உதவி செயற்பொறியாளா் சி.புவனேஸ்வரி, உதவி பொறியாளா் ஜெ.நித்யா ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com