சேலத்தில் கடைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு 2 வயது சிறுமி மற்றும் பள்ளி மாணவி காணாமல்போனதைத் தொடா்ந்து இருவரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.
சேலம் கன்னங்குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் லாரன்ஸ். இவரது மகள் எல். ஜெனீபா் (17). கன்னங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறாா். இந்த நிலையில் ஜெனீபா் கடந்த ஜனவரி 4-ஆம் தேதி தனது அக்காவின் மகள் எஸ்.பொ்லீனாவுடன் (2) கடைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்றாா்.
பின்னா், வெகுநேரமாகியும் இருவரும் வீடு திரும்பாததால் லாரன்ஸ் தனது பெரிய மகள் சோபியாமேரிக்கு தகவல் தெரிவித்ததோடு, தனது உறவினா்கள் வீடுகளிலும் தேடியுள்ளாா். ஆனால் இருவரும் கிடைக்காததால் பதற்றமடைந்த லாரன்ஸ் இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீஸாரிடம் புகாா் அளித்துள்ளாா்.
அதன்பேரில் கன்னங்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.