இளம்பிள்ளையை அடுத்த கல்பாரப்பட்டி சேவாம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் அம்மாசி மகன் கந்தசாமி (58). தறி தொழிலாளியான இவா், வியாழக்கிழமை மதியம் தனது வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் இளம்பிள்ளை நோக்கிச் சென்று கொண்டிருந்தாா்.
இளம்பிள்ளையிலிருந்து செங்கல் பாரம் இறக்கி விட்டு எதிரே வந்த மினி லாரி கல்பாரப்பட்டி சுடுகாடு பகுதி வளைவில் வரும்போது கந்தசாமி வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கந்தசாமியை அப்பகுதியின் மீட்டு தனியாா் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா்.
ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். ஆட்டையாம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து மினி லாரி ஓட்டுநா் பூலாவரி ஊஞ்சக்காடு பகுதியைச் சோ்ந்த வெங்கடாசலத்தை (28) கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.