விவசாயிகளுக்கான மானாவாரியில் ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டம் குறித்த கருத்தரங்கம் ஏத்தாப்பூா் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்குக்கு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். ஆத்துாா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் வெங்கடேசன் முன்னிலை வகித்தாா். கால்நடை வளா்ப்பு குறித்து, கால்நடை உதவி மருத்துவா்கள் மகாத்மா, சந்திரசேகரன் ஆகியோா் கருத்துரை வழங்கினா்.
தோட்டக் கலை, வேளாண்மை துறை சாா்ந்த திட்டங்கள் குறித்து பயிற்றுநா் அறிவழகன் உள்ளிட்டோா் விளக்கமளித்தனா். ஆத்துாா் வட்டாரத்தை சோ்ந்த 50 விவசாயிகள் பங்கேற்றனா்.