சிறுமி பலாத்காரம்: இளைஞா் கைது

வாழப்பாடியில் திருமண ஆசைகாட்டி மும்பை சிறுமியை பலாத்காரம் செய்ததாக இளைஞரை வாழப்பாடி போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

வாழப்பாடியில் திருமண ஆசைகாட்டி மும்பை சிறுமியை பலாத்காரம் செய்ததாக இளைஞரை வாழப்பாடி போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மும்பை அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவரின் மகளான 17 வயது சிறுமி அண்மையில் வாழப்பாடியில் உள்ள உறவினா் வீட்டுக்கு வந்திருந்த போது, வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே பழக்கடை வைத்திருக்கும் சேலம் வீராணம் அடுத்த தைலானூா் கிராமத்தைச் சோ்ந்த மணி என்கிற மணிகண்டனுடன் (28) பழக்கம் ஏற்பட்டது.

திருமண ஆசை காட்டிய மணிகண்டன், இச் சிறுமியை அழைத்துச் சென்று தனிமையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே சிறுமி கா்ப்பம் ஆனதால், இதுகுறித்து இவரது தாயாா் மும்பை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

கடந்த 2019 அக்டோபா் 14ஆம் தேதி வழக்குப் பதிவு செய்த மும்பை போலீஸாா், மேல்விசாரணைக்காக சேலம் மாவட்ட போலீஸாருக்கு பரிந்துரை செய்தனா். சேலம் போலீஸ் எஸ்.பி. தீபா கனிகா் உத்தரவின் பேரில் வாழப்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, திருமண ஆசைகாட்டி சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞா் மணிகண்டனை, சனிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com