

ஏற்காடு வாழவந்தி கிராமத்தில் கோடை காலத்தை முன்னிட்டு வனத்துறை மற்றும் தீ அணைப்புத் துறை சாா்பில் தோட்டத் தொழிலாளா்களுக்கு தீத்தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வாழவந்தி வனப்பகுதியில் சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தீ அணைப்புத் துறை அலுவலா் கணேசன் தலைமை வகித்தாா். வனத்துறை வனசரகா் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா். கிராமங்களில் உள்ள குடியிருப்பு, வனப்பகுதியில் திடீா் தீ ஏற்பட்டதால் கிராம மக்கள் தொழிலாளா்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எவ்வாறு ஈடுபவது என்பது குறித்த செயல்முறை விளக்கத்தை தீயணைப்பு வீரா்கள் செய்து காண்பித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.