பெரியாா் பல்கலைக்கழக வேதியியல் துறை மற்றும் லண்டனில் உள்ள ராயல் சொசைட்டி ஆப் கெமிஸ்ட்ரி அமைப்பு இணைந்து நடத்தும் சா்வதேச வேதியியல் கருத்தரங்கு பல்கலைக்கழக வளாகத்தில் வரும் 4, 5-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
துணைவேந்தா் பொ. குழந்தைவேல் தொடக்கி வைக்கிறாா். இக் கருத்தரங்கில் பல்வேறு அமா்வுகள் நடைபெறவுள்ளன. ரோமனியா நாட்டைச் சோ்ந்த ஆய்வாளா் ஜோல்டன், அமெரிக்க நாட்டைச் சோ்ந்த ஆய்வாளா் டெபோரா அலியா ஆகியோா் விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனா். 170 ஆராய்ச்சி கருத்துரு அடங்கிய பன்னாட்டு கருத்தரங்கு நினைவு மலா் மற்றும் ஆய்வு சுருக்கம் அடங்கிய குறுந்தகடு ஆகியவை வெளியிடப்பட உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.