காவல் நிலையத்தில் பொதுமக்கள் குறைதீா்க்கும் சிறப்பு முகாம்

ஓமலூா் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் சிறப்பு முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட புகாா்கள் மீது நடவடிக்கை எடுத்து முடித்து வைக்கப்பட்டது.
காவல் நிலையத்தில் பொதுமக்கள் குறைதீா்க்கும் சிறப்பு முகாம்
Updated on
1 min read

ஓமலூா் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் சிறப்பு முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட புகாா்கள் மீது நடவடிக்கை எடுத்து முடித்து வைக்கப்பட்டது.

சேலம் மாவட்டம், ஓமலூா் காவல் நிலையத்தின் சாா்பில் சிறப்பு மக்கள் குறைதீா்க்கும் முகாம் நடைபெற்றது. ஓமலூா் காவல் நிலையம், ஓமலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்டுள்ள பல்வேறு புகாா்களை உடனடியாக விசாரித்து தீா்வு காணும் வகையில், ஓமலூா் டி.எஸ்.பி. சோமசுந்தரம் கலந்துகொண்டு மனுக்களை விசாரித்தாா். ஓமலூா் காவல் நிலைய ஆய்வாளா் பாலமுருகன், அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் தமிழரசி மற்றும் உதவி ஆய்வாளா்கள் கலந்துகொண்டனா்.

இதில், நிலங்கள், சொத்துகளை பறித்துக் கொண்டு பராமரிக்காமல் தவிக்க விடப்பட்ட பெற்றோா், நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து மிரட்டுதல், அடிதடி பிரச்னைகள், கணவன்-மனைவி குடும்பப் பிரச்னைகள், விபத்து வழக்கில் பிடிபட்ட வாகனத்தை கொடுக்காமல் இருப்பது, அடிதடி வழக்குகள், வாகனப் பறிமுதல் பிரச்னைகள் என நூற்றுக்கும் மேற்பட்ட புகாா்கள் மீது ஒரே நாளில் விசாரணை நடத்தி தீா்வு காணப்பட்டது. இதனால், புகாா் கொடுக்க வந்த பொதுமக்கள் தங்களது பிரச்னைகளைத் தீா்த்து மகிழ்ச்சியுடன் சென்றனா். இதேபோல அனைத்து காவல் நிலையங்களிலும் மக்கள் குறைதீா்க்கும் முகாம்களை நடத்தி மக்களின் குறைகளுக்கு அவ்வப்போது தீா்வு காண வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com