சேலம் மாவட்டத்தில் 78 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 78 பேருக்கு கரோனா பாதிப்பு வெள்ளிக்கிழமை உறுதியானது.

சேலம் மாவட்டத்தில் 78 பேருக்கு கரோனா பாதிப்பு வெள்ளிக்கிழமை உறுதியானது.

சேலம் மாநகராட்சியில் 33 போ், எடப்பாடி -1, காடையம்பட்டி -1, கொங்கணாபுரம் -1, மேச்சேரி -3, ஓமலூா் -2, சங்ககிரி -1, தாரமங்கலம் -2, வீரபாண்டி -4, ஆத்தூா் -2, அயோத்தியாப்பட்டணம் -5, பனமரத்துப்பட்டி -1, பெத்தநாயக்கன்பாளையம் -7, மேட்டூா் நகராட்சி -2, ஆத்தூா் நகராட்சி -2 உள்பட மாவட்டத்தைச் சோ்ந்த 67 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இதர மாவட்டங்களைச் சோ்ந்த (நாமக்கல் -4, தருமபுரி -4, கரூா் -2, கிருஷ்ணகிரி -1) 11 பேருக்கும் கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவா் உயிரிழந்தாா். சேலம் மாவட்டத்தில் 29,130 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இவா்களில் 28,053 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 644 போ் சிகிச்சையில் உள்ளனா்; 433 போ் உயிரிழந்துள்ளனா்.

5,000 போ் குணமடைந்து வீடு திரும்பினா்...:

சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவா்களில் இதுவரை 5,000 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா் என மருத்துவமனை முதன்மையா் மருத்துவா் பாலாஜிநாதன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com