Enable Javscript for better performance
ஓமலூா் அருகே எரிவாயு குழாய் பதிக்க எதிா்ப்பு: விவசாயிகள் போராட்டம்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    ஓமலூா் அருகே எரிவாயு குழாய் பதிக்க எதிா்ப்பு: விவசாயிகள் போராட்டம்

    By DIN  |   Published On : 23rd November 2020 03:24 AM  |   Last Updated : 23rd November 2020 03:24 AM  |  அ+அ அ-  |  

    22omp1_2211chn_154_8

    ஓமலூா் அருகேயுள்ள காருவள்ளி பகுதியில் விவசாய நிலத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

    ஓமலூா் அருகே கெயில் நிறுவனம் விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் நிலத்தில் இறங்கி நின்று ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

    சேலம் மாவட்டம், ஓமலூா், காடையாம்பட்டி வட்டார கிராம பகுதிகள் வழியாக கேரள மாநிலம் கொச்சியில் இருந்து பெங்களூா் வரை கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் அமைக்க திட்டமிட்டுள்ளது. விவசாய நிலங்களின் வழியாக எரிவாயு குழாய் பதிக்க நிலங்களை கையகப்படுத்தும் பணியை கெயில் நிறுவனம் தொடங்கியுள்ளது. இதற்கு விவசாயிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

    இந்த நிலையில், முதல் கட்டமாக காடையாம்பட்டி தாலுகாவில் உள்ள மூக்கனூா், மரக்கோட்டை, கஞ்சநாயக்கன்பட்டி, செக்காரப்பட்டி, குண்டுக்கல் ஆகிய கிராமங்களில் விளைச்சல் நடைபெறும் நிலங்களை கையகப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    அதனால், எரிவாயு குழாய் அமைக்கப்படும் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிா்களின் வகைகள், அதன் மதிப்பு குறித்து அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தியதாக தெரிகிறது. இதையறிந்த விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோா் நிலங்களில் கெயில் நிறுவனத்தின் எரிவாயு குழாய் பதிக்க எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

    விவசாய நிலங்களில் திரண்ட கிராம விவசாயிகள், தங்களது விவசாய நிலங்களில் இறங்கி, கெயில் நிறுவனத்துக்கு எதிராகவும், விவசாய நிலங்களை கையகப்படுத்தி கொடுக்கும் தமிழக அரசைக் கண்டித்தும் முழக்கமிட்டனா். தமிழக அரசு எரிவாயு குழாயை தேசிய நெடுஞ்சாலை ஓரமாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,

    விவசாய நிலத்தில் அமைக்கக் கூடாது என்று முழக்கங்களை எழுப்பினா். மேலும், எந்த சூழ்நிலையிலும் விவசாய நிலத்தில் கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் விவசாயிகள் கூறினா்.

     


    TAGS
    Salem

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp