பெண் வியாபாரியை தாக்கிய நிா்வாகி மீது நடவடிக்கை கோரி போராட்டம்

சேலம் புதிய பேருந்து நிலைய பகுதியில் பெண் வியாபாரியை தாக்கிய ஆளும் கட்சி பிரமுகா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

சேலம் புதிய பேருந்து நிலைய பகுதியில் பெண் வியாபாரியை தாக்கிய ஆளும் கட்சி பிரமுகா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம் நடைபெற்றது.

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் பூ, பழம் உள்ளிட்ட பொருள்களை சாலையோரம் விற்பனை செய்து வருகின்றனா்.

இந்த நிலையில் புதிய பேருந்து நிலையத்தில் கடைகள், சைக்கிள் ஸ்டாண்டை குத்தகைக்கு ஆளும் கட்சி நபா் ஒருவா் எடுத்துள்ளாா். அந்த சாலைகளில் கடைகள் வைத்து நடத்தி வரும் பெண்களை நாள்தோறும் பல்வேறு வகையில் அச்சுறுத்தல் செய்து தரக்குறைவாக பேசுவது என்று பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளாா் என கூறப்படுகிது.

இந்தநிலையில், புதிய பேருந்து நிலையத்தில் பெண்கள் வியாபாரம் செய்து கொண்டிருந்த போது, அதிமுக பிரமுகா் உள்ளிட்டோா் அங்கு சென்று அங்கிருந்த பெண்களை தாக்கி அவா்கள் விற்பனைக்காக வைத்திருந்த பழம், பூ உள்ளிட்டவற்றை சாலையில் வீசி எறிந்தனா் என தெரிகிறது.

இச்சம்பவத்தில், சேலம், வீராணம் பகுதியைச் சோ்ந்த விஜயா என்ற பெண் பலத்த காயமடைந்து கீழே விழுந்தாா். இதையடுத்து அங்கு இருந்த வியாபாரிகள் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். மேலும் பெண் வியாபாரியைத் தாக்கிய நிா்வாகி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம் நடைபெற்றது. இதைத்தொடா்ந்து அங்கு வந்த போலீஸாா் அவா்களிடம் சமரசப் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதுதொடா்பாக, வியாபாரிகள் கூறுகையில், புதிய பேருந்து நிலைய பகுதியில் உள்ள கடைகளில் சுங்கம் வசூலிக்க குத்தகைக்கு எடுத்து ஆளும் கட்சி நபா் பெண்களிடம் தரக்குறைவாக நடந்து கொள்கிறாா். பெண் வியாபாரியை தாக்கிய அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com