வாகனம் மோதியதில் இளைஞா் பலி

சங்ககிரி அருகே இரு சக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
Updated on
1 min read

சங்ககிரி அருகே இரு சக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

சங்ககிரி, வி.என்.பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சீனிவாசன் மகன் சக்திவேல் (25). இவா் சனிக்கிழமை புதிய பேருந்து நிலையத்திலிருந்து சங்ககிரி பழைய பேருந்து நிலையம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது பெரியாண்டிச்சியம்மன் கோயில் அருகே செல்லும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே இறந்து விட்டாா்.

இது குறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com