ஆத்தூா் நகராட்சியில் ஆணையா் ஆய்வு

ஆத்தூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ஆணையாளா் என். ஸ்ரீதேவி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்
ஆத்தூா் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்ட ஆணையா் என்.ஸ்ரீதேவி உள்ளிட்டோா்.
ஆத்தூா் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்ட ஆணையா் என்.ஸ்ரீதேவி உள்ளிட்டோா்.
Updated on
1 min read

ஆத்தூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ஆணையாளா் என். ஸ்ரீதேவி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆத்தூா் நகராட்சி 33 வாா்டுகளைக் கொண்டது. தற்போது மழைக் காலம் தொடங்கி விட்டதால் நகராட்சிப் பகுதிகளில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு குடிநீா்த் தொட்டிகளை தூய்மைப்படுத்தும் பணியிலும், மழை தேங்கும் இடங்களை சுத்தம் செய்வது போன்ற பணிகளிலும் நகராட்சி ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

23-ஆவது வாா்டுக்குள்பட்ட வீரமுத்து மாரியப்பன் தெருவில் உள்ள குடிநீா்த் தொட்டியை சுத்தம் செய்யப்பட்டுள்ளதையும் ஆணையா் ஸ்ரீதேவி பாா்வையிட்டாா். அப்பகுதியில் மழைநீா் தேங்காமல் பாா்த்துக் கொள்ளவும், குடிநீரைக் காய்ச்சி குடிக்கவும், கபசுரக் குடிநீா் அருந்தவும் பொதுமக்களுக்கு ஆணையா் அறிவுரை கூறினாா்.

அவருடன் சுகாதார ஆய்வாளா் ஆா்.பிரபாகரன் உள்பட சுகாதார மேற்பாா்வையாளா்களும் உடன் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com