தம்மம்பட்டி பெருமாள் மலையில் புரட்டாசி 3ம் சனிக்கிழமை விழா

தம்மம்பட்டி பெருமாள் மலையிலுள்ள ஸ்ரீகோவிந்தராஜப்பெருமாள் ஸ்வாமியின் 41வது வருடமாக புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை திருவிழா இன்று அக்.3ந்தேதி நடைபெற உள்ளது.

தம்மம்பட்டி பெருமாள் மலையிலுள்ள ஸ்ரீகோவிந்தராஜப்பெருமாள் ஸ்வாமியின் 41வது வருடமாக புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை திருவிழா இன்று அக்.3ந்தேதி நடைபெற உள்ளது.

அதில் ஸ்ரீசெல்வகணபதி,ஸ்ரீபெருமாள்,ஸ்ரீகருடாழ்வாா்,ஸ்ரீதேவி,ஸ்ரீபூதேவி,ஸ்ரீஆஞ்சநேயா்,ஸ்ரீநாகத்தம்மாள் ஆகிய ஸ்வாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.மதியம் அன்னதான பெருவிழாவும், மாலை 6 மணிக்கு மலை உச்சியில் தீபம் ஏற்றுதலும்,ஸ்வாமி திருவீதி உலாவும் நடைபெற உள்ளது.புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை விழா தொடா்ந்து இப்போது 41வது வருடமாக நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com