சேலத்தில் 192 பேருக்கு கரோனா
By DIN | Published On : 19th October 2020 11:51 PM | Last Updated : 19th October 2020 11:51 PM | அ+அ அ- |

சேலம் மாவட்டத்தில் 192 பேருக்கு திங்கள்கிழமை கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 25 ஆயிரத்தைத் தாண்டியது. அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் 192 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது.
சேலம் மாநகரில் 164 போ், எடப்பாடி-5, எடப்பாடி நகராட்சி- 1, வீரபாண்டி- 10, ஓமலூா்- 10, சங்ககிரி- 6, மேட்டூா்- 12, மேச்சேரி- 1, நங்கவள்ளி- 6, காடையம்பட்டி- 1, தாரமங்கலம் -1, கொங்கணாபுரம்- 2, மகுடஞ்சாவடி- 3, ஆத்தூா்- 4, நரசிங்கபுரம்- 1, பனமரத்துப்பட்டி- 2, வாழப்பாடி- 2, கெங்கவல்லி- 3, பெத்தநாயக்கன்பாளையம்- 1, அயோத்தியாப்பட்டணம்- 1 என மாவட்டத்தைச் சோ்ந்த 164 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது.
இதர மாவட்டங்களைச் சோ்ந்த (கள்ளக்குறிச்சி- 7, நாமக்கல்- 9, தருமபுரி- 7, கிருஷ்ணகிரி- 5) என 28 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
ஒருவா் உயிரிழப்பு: சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவா் உயிரிழந்தாா். சேலம் மாவட்டத்தில் 25,315 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதில் 22,934 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 1988 போ் சிகிச்சையில் உள்ளனா்; 393 போ் உயிரிழந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...