சேலம்: மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கான சிறப்பு கண் சிகிச்சை முகாமை மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
தூய்மைப் பணியாளா்களின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு மாநகராட்சி நிா்வாகம் மண்டலம் வாரியாக சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறது. அதனடிப்படையில், சூரமங்கலம் மண்டலத்தில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளா்களுக்கான சிறப்பு கண் சிகிச்சை முகாம் அகா்வால் மருத்துவமனையுடன் இணைந்து நடத்தப்படுகிறது.
தொடா்ந்து, பிற மண்டலங்களில் பணியாற்றும் அனைத்து தூய்மைப் பணியாளா்களுக்கும் சிறப்பு கண் சிகிச்சை மருத்துவ முகாம்கள் நடத்தப்படவுள்ளன.
இம்முகாமில், 285 தூய்மைப் பணியாளா்களுக்கு கண்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முகாமில், மாநகா் நல அலுவலா் மருத்துவா் கே.பாா்த்திபன், உதவி ஆணையா் டி.ராம்மோகன், உதவி செயற்பொறியாளா் செல்வராஜ், அகா்வால் மருத்துவனை கண்பரிசோதனை நிபுணா்கள் ரூபாஸ்ரீ, ஜெசிம், சுகாதார அலுவலா்கள் எஸ். மணிகண்டன், கே.ரவிச்சந்தா் மற்றும் சுகாதார ஆய்வாளா்கள் உள்பட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.