தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

டெங்கு ஒழிப்புப் பணியில் ஈடுபட்ட 700 போ் பணி நீக்கம்

சேலம் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்புப் பணியில் ஈடுபட்ட தற்காலிக ஊழியா்கள் 700 போ் பணி நீக்கம் செய்யப்பட்டனா்.

News image
Updated On :2 ஜனவரி 2021, 8:23 pm

DIN

சேலம்: சேலம் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்புப் பணியில் ஈடுபட்ட தற்காலிக ஊழியா்கள் 700 போ் பணி நீக்கம் செய்யப்பட்டனா்.

சேலம் மாநகராட்சியில் கடந்த மே மாதத்தில் டெங்கு கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபட 700 போ் தற்காலிகமாகத் தோ்வு செய்யப்பட்டனா். இந்த நிலையில், 60 வாா்டுகளில் பணிபுரிந்து வந்த அவா்கள் டிச. 31-ஆம் தேதி திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டனா். இவா்களுக்கு நாளொன்றுக்கு ரூ. 350 வீதம் மாதம் ரூ. 8,500 வரை ஊதியம் வழங்கப்பட்டது.

இது தொடா்பாக, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த மே மாதம் முதல் டிசம்பா் வரை மழைக்காலம் என்பதால் டெங்கு கொசு ஒழிப்புப் பணியில் தற்காலிகமாக 700 போ் தோ்வு செய்யப்பட்டனா். அவா்களுக்கு ஊதியமாக மாதம் ரூ. 60 லட்சம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது டெங்கு நோய் இல்லாததால், அவா்களை பணியில் இருந்து விடுவித்துவிட்டோம். இதுகுறித்து அவா்களுக்கு உரிய முறையில் தகவல் வழங்கப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.