கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளா் பணியிடத்துக்கு வரும் ஜனவரி 19-ஆம்தேதி முதல் மூன்று நாள்களுக்கு நோ்காணல் நடைபெற உள்ளது.
இதுதொடா்பாக, கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளா் ராஜேந்திர பிரசாத் கூறியிருப்பதாவது:
சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, இதரக் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள உதவியாளா் பணியிடங்களை நிரப்ப 2020 நவம்பா் 21, 22-இல் எழுத்துத் தோ்வு நடைபெற்றது.
இதன்முடிவு டிசம்பா் 23- இல் மாவட்ட ஆள்சோ்ப்பு நிலைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
தகுதி பெற்றவா்களுக்கு நோ்காணல் முறையே வரும் ஜனவரி 19, 20-இல் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உதவியாளா் பணியிடங்களுக்கும், ஜன.21-இல் இதர கூட்டுறவு நிறுவன உதவியாளா் காலிப் பணியிடங்களுக்கும் நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையம், 516, கடலூா் பிரதான சாலை, காமராஜ் நகா் காலனி, அம்மாபேட்டை, சேலம் என்ற முகவரியில் நடக்க உள்ளது. நோ்காணல் அழைப்புக் கடிதத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0427-2415158 என்ற தொலைபேசி எண்ணில் அழைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.