ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பள்ளி சத்துணவு திட்டத்தில் பாலை சேர்க்க வேண்டும்: பால் உற்பத்தியாளர்கள் சங்க பணியாளர்கள் கோரிக்கை

வாழப்பாடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க பணியாளர்கள் சங்க கூட்டத்தில், தமிழக அரசு பள்ளி சத்துணவு திட்டத்தில் பாலை சேர்க்க வேண்டுமென

News image
வாழப்பாடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க பணியாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்.
Updated On :10 ஜனவரி 2021, 10:56 am

DIN

வாழப்பாடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க பணியாளர்கள் சங்க கூட்டத்தில், தமிழக அரசு பள்ளி சத்துணவு திட்டத்தில் பாலை சேர்க்க வேண்டுமென கோரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க பணியாளர்கள் பொதுக்குழுக் கூட்டம், வாழப்பாடி அரிமா அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சேலம் மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க பணியாளர்களின் கௌரவ தலைவர் வழக்கறிஞர் ஆர். ராஜேந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் வேல்முருகன் வரவேற்றார். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தின் பொதுச்செயலாளர் ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

தமிழ்நாடு பி.எம்.சி மாநில பொதுச் செயலாளர் விஜயகுமார், மாவட்ட பொறுப்பாளர் சேகர், மாவட்ட சங்க  செயலாளர், சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், விவசாயிகளுக்கு பால் பணம் நிலுவையில் இல்லாமல் வழங்கப்பட வேண்டும். பால் பற்றாக்குறை ஏற்படும் காலங்களில், தனியார் பால் பண்ணைகள் மூலமாக பால் கொள்முதல் செய்ய சங்கப் பணியாளர்கள் வற்புறுத்தக் கூடாது. அதிகமாக பால் உற்பத்தியாகும் காலங்களில் உற்பத்தியாளர்களிடம் பால் வாங்க மறுக்கக்கூடாது. அரசுப் பள்ளி சத்துணவு திட்டத்தில் பாலை சேர்க்க தமிழக அரசு எடுக்க வேண்டும். 

மற்ற மாநிலங்களைப் போல பாலில் கொழுப்புச்சத்து மட்டுமின்றி இதர சத்துக்களையும் அறிய ஐ.எஸ்.ஐ தரத்தில் அளவிட வேண்டும். கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கப் பணியாளர்களை பணி வரன்முறை படுத்திட வேண்டும். கரானா காலத்தில் ஓய்வில்லாமல் பணியாற்றிய பணியாளர்களுக்கு, பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வட்டார பொறுப்பாளர் தனபால் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.