தமிழ்நாடு பி.எம்.சி மாநில பொதுச் செயலாளர் விஜயகுமார், மாவட்ட பொறுப்பாளர் சேகர், மாவட்ட சங்க செயலாளர், சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், விவசாயிகளுக்கு பால் பணம் நிலுவையில் இல்லாமல் வழங்கப்பட வேண்டும். பால் பற்றாக்குறை ஏற்படும் காலங்களில், தனியார் பால் பண்ணைகள் மூலமாக பால் கொள்முதல் செய்ய சங்கப் பணியாளர்கள் வற்புறுத்தக் கூடாது. அதிகமாக பால் உற்பத்தியாகும் காலங்களில் உற்பத்தியாளர்களிடம் பால் வாங்க மறுக்கக்கூடாது. அரசுப் பள்ளி சத்துணவு திட்டத்தில் பாலை சேர்க்க தமிழக அரசு எடுக்க வேண்டும்.