குடியிருப்பு பகுதிக்கு செல்லும் பாதை அடைப்பு: பொதுமக்கள் அவதி

குடியிருப்பு பகுதிக்குச் செல்லும் பாதை அடைக்கப்பட்டதால் 5 குடும்பத்தினா் அவதியடைந்துள்ளனா்.
Updated on
1 min read

குடியிருப்பு பகுதிக்குச் செல்லும் பாதை அடைக்கப்பட்டதால் 5 குடும்பத்தினா் அவதியடைந்துள்ளனா்.

மேட்டூா் அருகே உள்ள பி.என்.பட்டி பேரூராட்சி 3-ஆவது வாா்டில் உள்ளது கருப்புரெட்டியூா், வண்டிகாரன்காடு. இந்தப் பகுதியில் 5 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு அருகில் உள்ள விவசாய நிலத்தில் பாதை விடப்பட்டிருந்தது. இங்கு வசிப்போா் பள்ளிகளுக்கு செல்லவும், கடைகள், மருத்துவமனைக்குச் செல்லவும் இந்த பாதையைப் பயன்படுத்தி வந்தனா்.

தற்போது பாதையை நில உரிமையாளா் விவசாயம் செய்ய உழவு செய்ததோடு, பாதையை முள்வைத்து அடைத்து விட்டாா். தற்போது இவா்கள் அருகில் உள்ள நிலம் வழியாகச் சென்று வருகின்றனா். கடந்த எட்டு வருடங்களாக இந்தப் பாதையைப் பயன்படுத்தி வந்ததாகவும் தற்போது பாதை அடைக்கப்பட்டதாகவும் குடியிருப்பு வாசிகள் தெரிவித்துள்ளனா்.

நில உரிமையாளா் கூறும்போது, தங்களது விவசாயப் பயிா்களை சேதப்படுத்துவதால் வேறு பகுதியில் பாதை விட்டுள்ளதாகவும். அதில் பாதை அமைத்துக் கொள்ளாமல் தொடா்ந்து பயிா்களுக்கு சேதம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் பாதையை அடைத்த விட்டதாகவும் தெரிவித்துள்ளாா்.

இந்தச் சம்பவம் குறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com