சங்ககிரி ஈஸ்வரன் கோயில்களில்  பிரதோஷ சிறப்புப் பூஜைகள் 

அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயில், சங்ககிரியை அடுத்துள்ள பூத்தலாக்குட்டையில் உள்ள பூத்தாழீஸ்வரர் கோயில்களில் பிரதோஷத்தையொட்டி சுவாமிகளுக்கு  சிறப்பு பூஜைகள் நடைபெற்றது
பிரதோஷத்தையொட்டி சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் சுவாமிகளின் உற்சவமூர்த்தி சுவாமிகளுக்கு புதன்கிழமை மாலை செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்
பிரதோஷத்தையொட்டி சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் சுவாமிகளின் உற்சவமூர்த்தி சுவாமிகளுக்கு புதன்கிழமை மாலை செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்
Updated on
1 min read

சேலம் மாவட்டம், சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயில், சங்ககிரியை அடுத்துள்ள பூத்தலாக்குட்டையில் உள்ள பூத்தாழீஸ்வரர் கோயில்களில் பிரதோஷத்தையொட்டி சுவாமிகளுக்கு  சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 

அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயிலில்  உள்ள சுவாமிகள், நந்தி பகவான் சுவாமிகளுக்கு பிரதோஷத்தையொட்டி பால், தயிர், திருமஞ்சனம், சந்தனம், விபூதி, குங்குமம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.  

இதே போல் சங்ககிரி அருகே உள்ள அன்னதானப்பட்டி கிராமம், பூத்தாலக்குட்டையில் உள்ள பூத்தாழீஸ்வரர், நந்தி பகவான் சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

இரு கோயில்களிலும் கரோனா வைரஸ் பாதுகாப்பு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  பக்தர்கள் முகக்கவசங்கள் அணிந்தும் சமூக இடைவெளிகளை பின்பற்றியும் சுவாமிகளை வணங்கிச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com