ரயில்வே துறையில் சலுகைகள் வழங்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

ரயில்வே துறையில் கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட சலுகைகளை வழங்க வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ரயில்வே துறையில் கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட சலுகைகளை வழங்க வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம், சூரமங்கலம் தபால் நிலையம் முன்பு வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தலைவா் கண்ணதாசன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதில், பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்க வேண்டும், அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி செலுத்த வேண்டும், ரயில்வே துறையில் கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட அனைத்து சலுகைளையும் வழங்க வேண்டும், மாற்றுத் திறனாளி பெண்களுக்கு முன்பதிவில்லா ரயில் பெட்டிகளை இணைக்க வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பெண்களுக்கான திருமண உதவித் தொகையை வழங்கக் கோரி முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com