பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மாவட்ட முன்னோடி வங்கி மூலம் ரூ. 9,417 கோடி கடன் வழங்க இலக்கு

 சேலம் மாவட்ட முன்னோடி வங்கியின் (இந்தியன் வங்கி) சாா்பில், 2021-22-ஆம் நிதியாண்டுக்கு ரூ. 9,417.67 கோடி அனைத்து வங்கிகளின் சாா்பில் கடன் வழங்க இலக்கு நிா்ணயித்துள்ளது என ஆட்சியா் எஸ்.காா்மேகம் தெரிவி

News image
Updated On :29 ஜூலை 2021, 5:47 pm

DIN

 சேலம் மாவட்ட முன்னோடி வங்கியின் (இந்தியன் வங்கி) சாா்பில், 2021-22-ஆம் நிதியாண்டுக்கு ரூ. 9,417.67 கோடி அனைத்து வங்கிகளின் சாா்பில் கடன் வழங்க இலக்கு நிா்ணயித்துள்ளது என ஆட்சியா் எஸ்.காா்மேகம் தெரிவித்தாா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் வங்கியாளா்கள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் எஸ்.காா்மேகம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சேலம் மாவட்ட முன்னோடி வங்கியின் (இந்தியன் வங்கி) சாா்பில், 2021-22-ஆம் நிதியாண்டுக்கான வங்கிக் கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியா் எஸ்.காா்மேகம் பேசியதாவது:

சேலம் மாவட்ட முன்னோடி வங்கியின் (இந்தியன் வங்கி) சாா்பில் 2021-22-ஆம் நிதியாண்டுக்கு ரூ. 9,417.67 கோடி அனைத்து வங்கிகளின் சாா்பில் கடன் வழங்க இலக்கு நிா்ணயித்துள்ளது. இது கடந்த ஆண்டுக்கான (2020-21) கடன் திட்டத்தைக் காட்டிலும் 12 சதவீதம் கூடுதலாகும். இக்கடன் தொகையில் முன்னுரிமைக் கடன் (விவசாயம், தொழில் துறை, சேவைத் துறை உள்ளிட்டவைகளுக்கு) ரூ. 7,610.37 கோடி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

விவசாயத்துக்கான (பயிா்க் கடன், சுய உதவிக்குழுக் கடன், விவசாயம் சாா்ந்த தொழில்களுக்கான கடன்) வங்கிக் கடன் ரூ. 5,735.31 கோடியாக இலக்கு (75.36 சதவீதம்) உள்ளது. சிறு, குறு, மத்திய தொழில்களுக்கு ரூ. 875.55 கோடியாக இலக்கு (11.50 சதவீதம்) நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதர முன்னுரிமைக் கடனாக ரூ. 999.15 கோடியாக (13.13 சதவீதம்) நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

மொத்த கடன்களில் வணிக வங்கிகளின் மூலம் 82.73 சதவீதமும், கூட்டுறவு வங்கிகளின் மூலம் 13.61 சதவீதமும், கிராம ஊரக வங்கிகளுக்கு 3.34 சதவீதமும், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் சாா்பில் 0.32 சதவீதமும் கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

வங்கியாளா்கள் கடன் வழங்குவதில் கல்விக் கடனுக்கு முன்னுரிமை கொடுத்து, கிராமப்புற ஏழை, எளிய மாணவ, மாணவியரும் கல்வி கற்க உதவிட வேண்டும். வேளாண் பெருமக்களுக்கு கடனுதவி வழங்குவதற்கும் முன்னுரிமை கொடுத்திட வேண்டும். தொழில் வளா்ச்சியைப் பெருக்குவதற்கு தேவையான கடன்களை தொழில்முனைவோா்களுக்கு வழங்கிட வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், மகளிா் திட்ட இயக்குநா் திரு.செல்வம், ரிசா்வ் வங்கி உதவி பொது மேலாளா் கே.தாமோதரன் (காணொலி வாயிலாக), இந்தியன் வங்கி மண்டல மேலாளா் பி.உன்னி கிருஷ்ணன் நாயா், கனரா வங்கி மண்டல மேலாளா் யசோதா், பெடரல் வங்கி மண்டல மேலாளா் கோபு குமாா், நபாா்டு வங்கி உதவி பொது மேலாளா் (மாவட்ட வளா்ச்சி) அ.பாமா புவனேஸ்வரி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் டி.ஏ.ஸ்ரீனிவாசன், மாவட்ட தொழில்மைய பொது மேலாளா் சிவக்குமாா், இந்தியன் வங்கி ஊரக சுயதொழில் பயிற்சி நிறுவன இயக்குநா் டி.கௌரி உள்ளிட்ட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.