பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறைமாதம் ஒரு நாள் 'புத்தகப்பை இல்லா நாள்': பள்ளிக் கல்வித் துறைபள்ளிகளில் ஓடி விளையாடு என்ற திட்டத்தின் மூலம் நாள்தோறும் விளையாடலாம்: பள்ளிக் கல்வித் துறைபரந்தூர் திட்டத்தைக் கைவிடுவது அரசுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும்! உதயநிதிபள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

சேலத்தில் கட்சிக் கொடிகள் தயாரிக்கும் பணி தீவிரம்

சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து, சேலத்தில் கட்சிக் கொடிகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

சேலம் ஜவுளி கடை பேருந்து நிறுத்தம்.

Published On :28 ஜனவரி 2024, 1:08 am IST

சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து, சேலத்தில் கட்சிக் கொடிகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகளான அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தங்களது கட்சிகளுக்குத் தேவையான கொடிகள், சின்னங்கள், தொப்பிகள் வாங்குவதற்கு ஆர்டர் கொடுத்து வருகின்றனர். 

கொடி மற்றும் சின்னத்தை வித்தியாசமான முறையில் வாக்காளர்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக பல வடிவங்களில் கட்சிக் கொடிகள், சின்னங்களை அச்சடிக்க அனைத்துத் கட்சியினரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் பிரசாரத்தின் போது தொண்டர்களுக்கு பயன்படும் வகையில், விதவிதமான வடிவங்களில் விசிறி, தொப்பி, நெற்றியில் மாட்டி கொள்ளும் கவசம் மற்றும் தலைவர்கள் உருவம் பொறித்த பேட்ஜ், வேட்டி, சேலை, துண்டு முதலானவற்றில் கட்சியின் வண்ணக் கரைகள், சின்னங்கள் அச்சிடப்பட்டு வருகின்றன. 

Story image

அதுமட்டுமின்றி கட்சித் தலைவர்களின் முகமூடிகளும் தயாரிக்கப்படுகின்றன. இதன் காரணமாக சேலத்தில் இரவு, பகலாக இவற்றைத் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு கட்சி கொடிகள் சைசுக்கு ஏற்றவாறு கொடியின் விலை ரூ 10 முதல் 200 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் கொடிகள் சேலம் தவிர திருநெல்வேலி, காஞ்சிபுரம், கோவை, திண்டுக்கல், கரூர், மதுரை, திருச்சி, சென்னை உள்ளிட்ட ஊர்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. 

கடந்த ஒரு மாதமாக வழக்கத்தைவிட மூன்று மடங்கு அதிகமாக கொடிகளை தயாரித்து வருகின்றனர். எதிர்வரும் மார்ச் ஏப்ரல் மாதங்களில் ஆர்டர்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அவ்வாறு ஆர்டர் வந்து வந்தாலும் அதை தயாரித்து சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கு வழங்க தொழிலாளர்கள் ஆயத்தமாக உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.